என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

உடல் பருமனி−ருந்து விடுதலை பெற...


உடல் பருமன் பிரச்னை காரணமாக ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோற்றம் மற்றும் உடல் அசைவுகளில் மட்டும் உடல் பருமன் பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் பலவித உடல் உபாதைகளுக்கும் வழி
வகுக்கிறது. இத்துடன் மதிப்புக் குறைவு, தன்னம்பிக்கை குறைவு போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளையும் உடல் பருமன் தோற்றுவிக்கிறது.


நவீன வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கங்களும் உடல் பருமனுக்கு சில முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி? கடும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள் ஆகியவை பெரும்பாலானோர் வழக்கமாகப் பின்பற்றும் சில முறைகளாகும். ஆனால் இவற்றை முறையாகப் பின்பற்றுவது என்பது அனைவராலும் முடியாது என்பதால் பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சி செய்வது, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை சில நாள்களில் நிறுத்தி விடுகின்றனர். உடல் எடையை அதிக சிரமமின்றி, ஆண்-பெண் இருவரும் குறைக்க ரிஷிதா ஸ்லிம் அண்டு கேர் நிறுவனம் உதவும்.

தொடக்க சிகிச்சையிலேயே உங்கள் உடல் எடையை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்குக் குறைக்கலாம். ரிஷிதா ஸ்லிம் அண்டு கேர் அளித்த சிகிச்சையால் தாம் பெற்ற பலன்களை 28 வயதான பிரியா என்பவர் கூறுவதைக் கேளுங்கள்: ""மணமாவதற்கு முன் நான் மிகவும் பருமனாக 96 கிலோ எடையுடன் இருந்தேன். உணவுக்க கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைப்பிடித்தும், அவை எனக்குக் கடினமாகத் தோன்றியதால் என்னால் தொடர்ச்சியாகப் பின்பற்ற இயலவில்லை. பிறரின் ஏளனம், கேலிப் பேச்சுக்குள்ளாகி, என் தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன்.

இந்த நிலையில் என்னுடைய மகளிர் நல மருத்துவர் ரிஷிதா ஸ்லிம் கேர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தார். அவர்கள் அளித்த சிகிச்சை முறையில் என் உடல் எடை 66 கிலோவாகக் குறைந்தது. பின்னர் தொடர்ந்து பெற்றுவந்த சிகிச்சையால் 39 கிலோவிற்கு வந்துவிட்டேன். உண்மையாகவே எனக்கு வியப்பாக இருந்தது. இந்த சிகிச்சை முறையில் தீவிர உடற்பயிற்சிகளோ, மருந்துகளோ பயன்படுத்தப்படவில்லை. நான் இழந்த எனது தன்னம்பிக்கையை மீண்டும் பெற்று அழகானவளாகவும் உணர்கிறேன். பின்னர் எனக்கு நல்ல கணவர் அமைந்து தற்சமயம் மகிழ்ச்சியான மண வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன்''.

இளமைக்கு உதவும் ஆசனங்கள்


எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.


இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி, மச்சாசனம், சிரசாசனம் ஆகியவற்றை முறையாக செய்து வந்தால் எந்த ஆரோக்கியக் குறைபாடும் இன்றி இளமையாக வாழலாம். ஆனால், இவற்றை முறையாக செய்வது மட்டுமின்றி, இதற்கு இணையான அதாவது நின்றபடி செய்யும் ஆசனங்களையும் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மேலும் இந்த ஆசனங்கள் ஒவ்வொன்றிற்கும் நடுவே சாவாசனம், சுவாசனம், நித்திரை ஆசனம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். சவாசனம் என்பதற்கு தெற்கு நோக்கி தலை வைத்தபடியும், நித்திரையாசனத்தில் மேற்கு நோக்கி தலை வைத்தபடியும் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்


தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை,கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது நல்லது . மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து செகன்டுகள் அப்படியே வைத்திருக்கவும். உடலில் கொழுப்பு வடிவில்
சேமித்து வைகப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.


உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்ததில் சர்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தை தயாரித்துக்கொள்ளுங்கள்.

ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைபிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள். நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு தனியாக உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை. பொழப்ப பார்ப்பனா கைய கால தூக்கிகிட்டு எக்சர்சைசு செய்யணுமா? என்று சொல்லக்கூடியவர் நீங்கள் என்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யுங்கள்.

தனுராசனம்


வில் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது இந்த ஆசனம். தனுர் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வில் என்று பொருள். இது சலபாசனமும் புஜங்காசனமும் இணைந்து உருவான ஆசனம்.


உடலின் தொப்புளுக்கு மேற்பட்ட பகுதி புஜங்காசனத்தில் இருக்க, கீழ்ப்பகுதி சலபாசனத் தோற்றத்தில் இருக்கும். அதனுடன் கைகள், கால்களைப் பிடித்திருக்க முழங்கால் மடங்கி வில்போன்று தோற்றமளிக்கும். முதுகெலும்பு பின்புறம் வளையும் புஜங்காசனம் ஒருவகை. தனுராசனத்தில் வேறு வகையாக அமையும்.

செய்முறை

1. ஒரு விரிப்பை நீளவாட்டில் மடித்து அதன்மீது குப்புறப்படுக்கவும்.

2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.

3. இடக்கை விரலால் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும்.

4. மெதுவாக இடக்காலை பின்புறமாக மடக்கி வரவும்.

5. இந்த நிலையில் தொடை வயிறுக்குச் சமீபம் அமையும்.

6. இப்போது கைகள் இரண்டையும் முதுகுப்புறமாக நீட்டி மடங்கிய கால்களைப் பற்றிக் கொள்ளவும்.

7. இந்நிலையில் வயிற்றுப்பகுதி மட்டும் தரையில் படிந்திருக்க வேண்டும். தலை தூக்கிய நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆசனத்தை இரண்டு நிமிடம் செய்யலாம்.

பயன்கள்

1. ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா நோய்கள் குணமாகும்.

2. இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

3. அட்ரீனல் நாளத்தை நன்கு இயக்கி உடல் முழுவதும் சுறுசுறுப்படையச் செய்யும்.

4. பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.

5. நரம்புகளும் முதுகெலும்பும் வளையும். கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும். சிறுநீரக நோய்கள் நீங்கும்.

6. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.

7. அஜீரணம், வயிற்று வலி நீங்கும்.

மாரடைப்பை தடுப்பது எப்படி?


இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான புகைபிடித்தல் போன்ற காரணங்களை தவிர்த்து, அத்தகைய மருத்துவ காரணங்கள் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு) இருப்பின் அதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான சில
வாழ்வு முறைகளை அமைத்து, அதை தவறாமல் கடைபிடித்து வருவதே மாரடைப்பை தடுக்க சிறந்த வழி.


ஆரோக்கியமான வாழ்வு முறை:

கொழுப்புச் சத்து குறைந்த உணவு உட்கொள்ளுதல். உணவில் சரியான அளவு பழவகைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளுதல். உப்பின் அளவை குறைத்தல். இத்தகைய உணவு முறைகளின் மூலம் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து போன்ற மருத்துவ காரணங்களையும் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.

சரியான உடல் எடையை பேணுதல்:

இது உங்கள் உயரத்தை பொறுத்தது. இதைக் கண்டறிய, உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதிலிருந்து 100ஐ கழித்தால் வரும் எண்ணின் அளவிலான, “கிலோ’ அளவே உங்கள் சரியான எடை. உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ., என்றால், உங்களின் சரியான எடை (100 கழித்து) 60 கிலோ இருக்க வேண்டும்.

இடுப்பின் சுற்றளவு, ஆண்களுக்கு 90 செ.மீ.,க்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீ.,க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இடுப்பின் அளவு இதற்கு மிகையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பின்னாளில் மாரடைப்போ, பக்கவாத நோயோ வரும் சாத்தியக் கூறுகள் இருமடங்காகின்றன. இதன் பொருள் என்னவென்றால், உடலின் மற்ற பாகங்களில் தேங்கும் கொழுப்பை விட, இடுப்பில் படியும் கொழுப்பு, உடலின் உள்ளுறுப்புகளின் கொழுப்பு சதவீதத்தை பிரதிபலிக்கிறது.

கூந்தலின் எதிரி ஈரம்


உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம்
குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.


குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

குளிக்கும்போது…

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம்.

அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும். தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும்.

மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம். குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள்.

ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைம் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

சீப்பு

உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சப்பை பயன்படுத்துவது நல்லது. சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும்.

மசாஜ்

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இயற்கை தரும் அழகு

நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும்.

தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா?


வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்து "பிரிஜ்'ஜில் வைத்து கொடுக்கின்றனரே, இது ஆரோக்கியமானதா? எவ்வளவு நேரம் "பிரிஜ்'ஜில் வைக்கலாம்?

வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் மட்டுமே பாலை எடுக்க வேண்டும்.

எடுத்த பின், காற்று புகாத வகையில், இறுக்கமான மூடியால் மூட வேண்டும். புட்டி மீது, அது என்னது, எந்த தேதியில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும். "பிரிஜ்'ஜில், பின்புறம் அல்லது, "ப்ரீசரில்' வைத்து பாதுகாக்க வேண்டும். "பிரிஜ்'ஜில் ஐந்து நாட்களும், "ப்ரீசரில்' இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து பாதுகாக்கலாம்.

ஏற்கனவே புட்டியில் அடைக்கப்பட்ட பாலுடன், புதிதாக எடுக்கப்பட்ட பாலை கலந்து வைக்கக் கூடாது. அதேபோல், ஒரு முறை புட்டியை திறந்தால், அதில் பாலை மிச்சம் வைத்து, அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைச் சுட வைத்து, அதன் மீது இந்த பாலை வைத்து சூடு செய்யலாம். நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்த கூடாது.

மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. கொதிக்க வைப்பதும் தவறு. ஒரு முறை, "பிரிஜ்'ஜிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும், "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. "பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்

ஆசனவாயில் வலி ஏற்பட்டால்...


மது மலக்குடலின் முடிவில் ஆசனவாய் உள்ளது. மென்மையான சுருக்கு தசையாலான இந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் சற்று அதிகமாக இருக்கும். ஆசனவாய்ப் பகுதியில் பலவித பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

வெடிப்பு, விரிசல், மலம் கழிக்கும்போதும், கழித்த பின்னரும் தாங்க முடியாத வலி, எரிச்சல், நமைச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, சீழ்க் கட்டி, பிளவை, மூலம், ரத்தக் கட்டி போன்றவற்றைக் கூறலாம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்:

பெரும்பாலான பிரச்னைகளுக்கு உணவு முறையும், மலச்சிக்கலுமே காரணமாக உள்ளது. நீர் குறைந்த, காய்ந்துபோன மலத்தை முக்கி வெளியேற்றும் போது மென்மையான தசைகள் பாதிப்புக்குள்ளாகி லேசாகக் கிழிந்து விடுகிறது அல்லது விரிசலடைந்து விடுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். சிலருக்கு கீழ்க்கட்டிகள் ஏற்படக்கூடும். இதற்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியம். மூலம், ஆசனவாய் இறக்கம், புற்று நோய்க்கட்டிகள் ஏற்படக்கூடும்.

மூல நோய் காரணமாக மலம் கழிக்கும் போதும், கழித்த பின்னரும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கட்டிகளிலிருந்தும் ரத்தக் கசிவு உண்டாகலாம். இதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். வயிற்றில் பூச்சிகள் இருப்பதால், மலவாய்ப் பகுதியில் அரிப்பும், நமைச்சலும் இருக்கும்.

பெரும்பாலும் குழந்தைகள்தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவார்கள். குதம், மலக்குடல் போன்றப் பகுதி முக்கியமானதும் சிக்கலானதுமாக இருப்பதால் இது தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. இத்தகைய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க மலக்குடல் நோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.

மா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்


காத‌ல் வ‌ங்‌கி‌த் துவ‌க்க வே‌ண்டிய அள‌வி‌ற்கு காதலு‌க்கு‌ப் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்ச வே‌ண்டிய ‌நிலை வ‌ந்து‌வி‌ட்டது. த‌ற்போ‌திரு‌க்கு‌ம் கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு ஏ‌ற்படு‌ம் ‌சில பல ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌ல்
குடு‌ம்ப உறவுக‌ள் த‌விடுபொடியா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது.


இத‌ற்கெ‌ல்லா‌ம் அடி‌ப்படை‌‌க் காரண‌ம் தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவு ‌நிலை எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவரை அணுகு‌‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம்ப‌த்ய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு மரு‌த்துவரை அணுக பெ‌ரிது‌ம் த‌ய‌ங்கு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் மரு‌த்துவ‌ர்களே, இதுபோ‌‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ‌விள‌க்க‌ம் சொ‌ல்ல மு‌ன்வரு‌‌‌கி‌ன்றன‌ர்.

அதாவது ‌சில ‌விஷய‌ங்களை மா‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் எ‌ன்பதே அவ‌ர்களது முத‌ல் ஆலோசனை. ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் எ‌ப்போது‌ம் இர‌வி‌ல் ம‌ட்டுமே உறவு கொ‌ள்வா‌ர்க‌ள். தூ‌க்க களை‌‌ப்‌பிலு‌ம், உடலு‌க்கு உற‌க்க‌ம் தேவை‌ப்படு‌ம் நேர‌த்‌திலு‌ம் உறவு கொ‌ள்வதா‌ல் அ‌தி‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படலா‌ம். ‌

சில நேர‌ங்க‌ளி‌ல் காலை‌யி‌ல் கு‌ளி‌த்து முடி‌த்து உடலு‌ம், மனமு‌ம் உ‌ற்சாகமாக இரு‌க்கு‌ம் போது உறவு கொ‌ள்வ‌தி‌ல் ‌நி‌ச்சய‌ம் புது‌விதமான மா‌ற்ற‌த்தை உணர முடியு‌ம். அது போலவே, இரு‌ட்டி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள், ‌சி‌றிது வெ‌ளி‌ச்ச‌த்‌திலு‌ம், வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள் லேசான இரு‌ட்டிலு‌ம் உட‌ல் உறவு கொ‌ள்ளலா‌ம். எ‌ப்போது‌ம் ஒரே முறை‌யிலான உட‌ல் உறவு கூட ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்தலா‌ம்.

எனவே உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் முறைக‌ளிலு‌ம் மா‌ற்ற‌ங்களை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக.. உட‌ல் உறவு எ‌ன்றது‌ம் ஒரு ‌சில ‌நி‌மிட‌ங்களே போது‌ம் எ‌ன்று ‌நினை‌க்காம‌ல், அத‌ற்காக அ‌திக நேர‌த்தை ஒது‌க்‌கி கணவ‌ன் - மனை‌வி இருவருமே த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக நட‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது.

உட‌ல் உறவு கொ‌ள்ள இ‌ந்த நா‌ட்க‌ள் ம‌ட்டுமே எ‌ன்று ப‌ட்டிய‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்ளாம‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் ஆசை‌‌க்கே‌ற்ப உட‌ல் உறவு வை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்ல த‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ற்கு வ‌ழிகோலு‌ம். ஒருவ‌ர் உட‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் போதோ, அ‌திக களை‌ப்படை‌ந்‌திரு‌ந்தாலோ அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உட‌ல் உற‌வி‌ற்கு அழை‌ப்பதை துணைவ‌ர் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உ‌ங்களது ஆதரவு‌ம், அ‌ன்பு‌ம் அவரு‌க்கு‌த் தேவை எ‌‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம். ‌பி‌ரி‌ந்‌திரு‌ந்தாலு‌ம் பலன‌ளி‌க்கு‌ம்...  ஒரு ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் ஒரே அலுவலக‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் கூடவே இரு‌ப்பதா‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படுவது‌ம் உ‌ண்டு. இ‌ப்படியான‌வ‌ர்க‌ள் ‌சில நா‌ட்களு‌க்கு ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது‌ம் (ச‌ண்டை போ‌ட்டு அ‌ல்ல) பெ‌ண் தா‌ய் ‌வீ‌ட்டி‌லோ அ‌ல்லது தோ‌ழி‌யி‌ன் ‌வீ‌ட்டிலோ செ‌ன்று த‌ங்‌‌கி‌யிரு‌க்கலா‌ம்.‌ ‌

சில நா‌ட்களு‌க்கு கணவ‌ன் - மனை‌விய‌ர் ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது அ‌ன்பை‌க் கூ‌ட்டவு‌ம் செ‌ய்யு‌ம். ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் நா‌ட்க‌ளி‌ல் ம‌ணி‌க்கண‌க்‌கி‌ல் போ‌னி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்காம‌ல் முழுவதுமாக ஒருவரை ஒருவ‌ர் சுத‌ந்‌திரமாக ‌வி‌ட்டு‌விடுவது‌ம் அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌‌க்கு‌ம் அ‌ன்பை ஒருவரு‌க்கொருவ‌ர் பு‌ரிய வை‌க்க ஏதவாகு‌ம்.

கால‌ம் கட‌ந்தவ‌ர்க‌ள்.. தாம்ப‌த்ய‌த்‌தி‌ல் வெறு‌ப்படை‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் த‌ம்ப‌திக‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் பே‌சி, ஒரு ‌சில நா‌ட்க‌ள், வார‌ங்க‌ள், மாத‌ம் என ஒரு கால‌க் க‌ட்ட‌த்தை ‌நி‌ர்ண‌யி‌த்து‌க் கொ‌‌ண்டு அதுவரை தா‌ம்ப‌த்ய‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ங்க‌ள். ஆனா‌ல், இ‌ந்த சமய‌த்‌தி‌ல் எ‌ல்லா‌ம் த‌னி‌த்த‌னியாக  இரு‌ந்து ‌விடாம‌ல் ஒருவரை ஒருவ‌ர் ‌சீ‌‌ண்டி‌க் கொ‌ண்டிரு‌‌க்கலா‌ம்.

இதனா‌ல் தா‌ம்ப‌த்ய‌த்‌தி‌ன் ‌மீது ஒரு ஏ‌க்‌க‌ம் ‌பிற‌க்கு‌ம். ஒரு வேளை இ‌ந்த முய‌ற்‌சி‌யினா‌ல், கால‌க் கெடு வரை கா‌த்‌திரு‌க்க முடியாம‌ல் கூட ‌சில த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது தா‌ம்ப‌த்ய‌த்தை அனுப‌வி‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படலா‌ம். எனவே எ‌தையு‌ம் முழு ரசனையோடு‌ம், அ‌ன்போடு‌ம் செய‌ல்படு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் துணை வா‌ழ்‌க்கை‌த் துணையாகு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

தலைக்கு அழகு முடி


தலை உடலின் தலையாய பாகம். தலைக்கு அழகு முடி. கூந்தலை அழகாக வைத்துக் கொள்வதுதான் உண்மையில் நம்மை அழகாக வைத்துக் கொள்வதற்குச் சமம். இக்காலத்தில் அருகருகே அழகு நிலையங்களைப் பார்க்கலாம்.


இயற்கையில் அழகானவர்கள் பெண்கள் என்றால் அவர்களிடம் மிகவும் அழகானது கூந்தல்தான். அதனால்தான் அவர்கள் கூந்தல் அலங்காரத்தில் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள். ஆனால் அழகிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் கூந்தலுக்கு நிறையவே தொடர்பு உண்டு.

***
உண்மையில் தலைமுடி அழகிற்கான படைப்பு அல்ல. உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி தலைக்கு பாதுகாப்பை அளிப்பதே கூந்தலின் பணி. எண்ணைப்பசை தலைமுடி, வறண்ட தலைமுடி, எண்ணைப் பிசுக்குடன் கூடிய வறண்ட தலைமுடி என முடியில் சில வகைகள் உள்ளன. பளபளப்பாக காட்சி தருவது ஆரோக்கியமான கூந்தல். பளபளப்பை இழந்திருப்பது வறண்ட தலைமுடி. அதிக அளவு வைட்டமின் பி மற்றும் புரதச் சத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.

***
ஒரு மனிதனுக்கு தலையில் ஒரு லட்சம் முடிகள் வரை இருக்கும். தினமும் 80 முடிகள் வரை கொட்டும். குளித்துவிட்டு தலைதுவட்டும்போது கொத்துக் கொத்தாக முடி உதிர்ந்தால் உடனே கவனிக்க வேண்டும். வளரும் நிலையில் 80 முதல் 90 சதவீத முடிகள் இருக்கும். மற்றவை ஓய்வுநிலை, உதிரும் நிலையில் இருக்கும். தினமும் உதிரும் 80 முடிகள் தான் உதிரும் முடிகள் கணக்கில் சேரும். கெரட்டீன் என்ற புரதத்தால் ஆனது தலைமுடி. அதன் வளர்ச்சிக்கு புரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை. இல்லாவிட்டால் முடி உதிரும்.

***
பச்சைக் காய்கறி மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றில் இருக்கும் இரும்பு மற்றும் செம்பு போன்ற தாதுக்களும் கூந்தலுக்கு நல்லது. நம் தோலில் சீபம் என்ற எண்ணைப் பசை சுரக்கும். இதன் அளவு குறைந்தாலும் தலைமுடி வறண்டு போகும். எண்ணைப் பிசுக்கான கூந்தல் உள்ளவர்கள் கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறண்ட கூந்தல் உள்ளவர்கள் உணவில் சற்றே அதிக அளவில் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

***
கூந்தலைப் பராமரிக்க பொதுவான சில வழிகள் உண்டு. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அந்த ஆவியில் கூந்தலைக் காட்டலாம். அல்லது கொதிக்கும் நீரில் துண்டை நனைத்துப் பிழிந்து தலையில் சுமார் 10 நிமிடம் வரை சுற்றிக்கொண்ட பின்பு தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் பொடியால் தலைமுடியை நன்றாக அலசிக் காயவிட்டால் தலைமுடி மென்மையாகும். எலுமிச்சம் பழச்சாறில் வினிகர் கலந்து தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் முடி வறட்சி குறையும்.

***
அதிகம் முடி கொட்டுவதைத் தடுக்க ஹேர்பேக் செய்ய வேண்டும். இதற்கு நெல்லிக்காய், வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, செம்பருத்திப் பொடி, வல்லாரைப்பொடி, கரிசாலைப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராமும், வேப்பிலைப் பொடி 5 கிராமும் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கெட்டியான கரைசல் தயாரிக்க வேண்டும். தலையில் சிறிது எண்ணை தடவிக் கொண்ட பிறகு இந்தக் கலவையை முடியில் தேய்த்து `ஹேர்பேக்’ செய்ய வேண்டும். அரைமணி நேரம் கழித்து அரிசி வடித்த கஞ்சியில் சீயக்காய் பொடியை கலந்து தேய்த்துக் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். கூந்தலுக்கு பளபளப்பும் கிடைக்கும்.

புகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்


மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்
வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.


புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.

1) நிக்கோட்டின் 2) கார்பன் மோனாக்சைடு

நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிக்கோடினும், ரத்தநாளங்களில் அடைப்பும்:

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

கொழுப்பு சத்தும், நிக்கோடினும்:

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது. தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம்.

க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது தெரியுமா?


பொதுவாக நமது உட‌ல் உறு‌ப்புகளை பல வ‌ழிக‌ளி‌ல் நா‌ம் சு‌த்த‌ம் செ‌ய்‌கிறோ‌ம். கு‌ளி‌ப்பதா‌ல் உட‌ல் சு‌த்த‌ப்படு‌கிறது. ஆனா‌ல் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது தெரியுமா?
நமது க‌ண்‌ணீ‌ர்தா‌ன். ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன.


இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன. அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன.

இத‌ன் காரணமாக, வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம். ஆனா‌ல், இ‌ந்த க‌ண்‌ணீ‌ர் அ‌வ்வளவு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன. அதுபோல, காய‌ம்ப‌ட்ட கு‌ழ‌ந்தை‌யி‌ல் ‌அழு‌ம் குழ‌ந்தை‌க்கு காய‌ம் எ‌ளி‌தி‌ல் ஆறு‌ம் ‌விநோதமு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

மாதுளையின் மகத்துவம்!


உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பழமாக விளங்கும் மாதுளம் பழத்தின் சாறு சிறுநீரகத்துக்கு
மிகவும் நல்லது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.


இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதய நோயாளிகளுக்கும் நல்லது என்றும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி மாதுளம்பழம், ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகவும் செயல்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில், மாதுளம் பழச்சாறு குடித்த நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடல் பாதுகாப்பு கிடைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்; ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


இத்தாலி நாட்டில் உள்ள புளோரன்ஸ் பல்கலைக்கழக டாக்டர்கள், பெண்களின் செக்ஸ் ஆசை குறித்து ஆராய்ச்சி நடத்தினார்கள். நீண்டநாள் ஆய்வுக்குப்பிறகு சிவப்பு ஒயின் குடித்தால் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்ற முடிவுக்கு
வந்துள்ளனர். இந்த சோதனைக்காக 18 வயது முதல் 50 வயது வரை 800 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


அவர்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டனர். முதல் வகை பெண்களுக்கு தினமும் 2 டம்ளர் மற்றும் அதற்கு மேல் சிவப்பு ஒயின் கொடுக்கப்பட்டது. இரண்டாவது வகை பெண்கள் தினமும் ஒரே ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் குடிக்க அனுமதிக்கப்பட்டனர். மூன்றாவது வகைப்பெண்கள் மது எதுவும் குடிக்காமல் இருந்தனர். சமீபத்தில் இந்த 3 வகை பெண்களிடம் 19 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன.

இதன் மூலம் தினமும் 2 டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் அதிக செக்ஸ் ஆசை கொண்ட பெண்களாக மாறி இருப்பது தெரிந்தது. தினமும் ஒரு டம்ளர் சிவப்பு ஒயின் குடித்த பெண்கள் செக்ஸ் ஆசையில் ஓரளவு ஈடுபாட்டுடன் இருந்தனர்.

முழுமையான மதுவிலக்குடன் இருந்த பெண்களுக்கு செக்ஸ் ஆசை எழவில்லை என்பது தெரியவந்தது. சிவப்பு ஒயின்கள் உடம்பில் ரத்த ஓட்டத்தை வழக்கத்தை விட அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதுதான் செக்ஸ் ஆசையைத்தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பருக்கள் மறைய

இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை
மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம். சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.


பருக்கள் மறைய

பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.

முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற,

முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும். செம்பருத்திப் பூ ரோஜா மொட்டு வெள்ளரிக்காய் சாறு இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.

பேன் பொடுகு மாற

வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும். உடல் நாற்றம் நீங்க வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும். நாற்றம் நீங்கும்.

உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நாற்றம் ஏற்படாது. காய்ந்த எலுமிச்சம் பழத்தோலை பொடிசெய்து அதனுடன் காய்ந்த ரோஜா இதழ் பொடி, வெட்டி வேர் (ராமிச்சம்) பொடி, இவைகளை சம அளவு எடுத்து இவற்றுடன் சிறிது சந்தனத் தூள் சேர்த்து நீரில் குழைத்து முகம் மற்றும் உடலெங்கும் பூசி குளித்து வந்தால், பித்தம் தணிந்து, பித்தச்சூடு குறைந்து வியர்வை நாற்றம் நீங்கும்.

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்

அன்னாசி பழத்தில் வைட்டமின் B உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறதது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெரும்.

நலம் தரும் இளநீர்


காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும் .இது இரத்தம் சுத்தம் அடையவும்
கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.


இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள்.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.

பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும்.

காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. . மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர்.

வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது .இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் குடிக்கலாம். தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது.

பயன் தரும் புதினா

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் உணவுக்கு சுவையும் மணமும் தர பயன்படுத்தப்படுகிறது.புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது மற்றும் .மணமும் காரச் சுவையும் கொண்டது.பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர
புதினா மிகவும் உதவுகிறது. ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் வாய்வுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இதில் இருக்கின்றன.


துவையல், சட்னி, போன்றவை தயாரிக்கவும் மசால்வடை தயாரிக்கவும் பயன்படுகிறது பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. , வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

வாய் நாற்றம் அகலும்.சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது.

தொப்பை பிரச்னை இனி இல்லை!


ஒருவரைப் பார்த்தவுடன் முதலில் தம் கவனத்தை கவர்வது அவரது தோற்றம்தான். முதல் தோற்றமே முக்கிய தோற்றம் என்பார்கள். வனப்பையும் பொலிவையும் குறைத்து, கேலிக்கு ஆளாக்குவதும் தொப்பைதான். குனிந்து நிமிர முடியாமல் நம்பிக்கையை இழக்கிறது.


எளிதாக உங்கள் அதிக உடல் எடையைக் குறைத்து, அழகையும், பொலிவையும் நீங்கள் மீண்டும் பெற, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது "ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்' சிகிச்சை மையம். முதல் அமர்விலேயே இடுப்பு அளவு ஒன்று முகல் இரண்டு அங்குலம் வரை குறைவதை அனுபவபூர்வமாக உணரலாம். இதோ, உணா என்கிற 40 வயது பெண்மணி சொல்வதைக் கேளுங்கள்...

""நான் இயல்பிலேயே அழகானவள். திருமணத்திற்கு முன்பு மெலிதாக இருந்தேன். திருமணம் ஆகி குழந்தைகள், குடும்பப் பொறுப்பு என்று பரபரப்பாக இருந்ததில் உடலை கவனிக்க முடியாமல் போயிற்று. நான் பருமனானேன். எனது வயிறு பெரிய தொப்பையாக உருமாறியது. இந்த தொப்பையினால் நான் பெரிய சங்கடத்துக்கு உள்ளானேன். குனிந்து நிமிர முடியாமல், நல்ல உடைகளை அணிய முடியாமல், எப்போதும் எங்கே தொப்பை தெரிந்துவிடுமோ என்று இழுத்துப் போர்த்திய வண்ணம் ஒரு பதற்றத்துடனேயே இருந்தேன்.

இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடினமான உடற்பயிற்சிகள் போன்றவற்றைச் செய்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து செய்ய முடியாமல் நிறுத்தி விட்டேன். மிகவும் மனம் தளர்ந்து போய், சோர்வடைந்தேன். இந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக ""ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்'' மையத்தின் விளம்பரத்தைப் பார்த்தேன்.

பின்னர் "ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்' மையத்துக்கு நேரில் சென்றேன். இந்த மையத்தை நடத்தி வரும் ரிஷிதா, பழகுவதற்கு இனிமையானவர். அவர் என்னுடைய பிரச்னைகளை நன்றாக புரிந்து கொண்டு, எனக்கு நல்ல வழி முறைகளைச் சொல்லி எனக்கு நம்பிக்கை தந்தார். நான் "ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர்' சிகிச்சையில் சேர்ந்தேன்.

முதல் அமர்விலேயே இன் இடுப்பளவில் நான் ஒன்றரை அங்குலத்தை இழந்தேன். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி. அற்புதமாக பலனளித்த இந்த சிகிச்சை முறைகளால் சில அமர்வுகளிலேயே எனது தொப்பை வெகுவாகக் குறைந்து விட்டது. இவை எல்லாமே மருந்துகளோ மாத்திரைகளோ இல்லாமல். டேப்பிங், டோனிங் போன்ற நவீன சிகிச்சைகள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுக் கருவிகள் மூலம் தரப்பட்டன. ஃபேஸ் லிஃப்டிங் முறை மூலம் எனது முகத்தில் இருந்த சுருக்கங்கள் நீக்கப்பட்டு என் முகம் இளமைப் பொலிவை அடைந்தது.

நான் இழந்த என்னுடைய அழகையும் தன்னம்பிக்கையும் திரும்பப் பெற்றேன். "ரிஷிதா ஸிலிம் அண்ட் கேருக்கு' என் மனமார்ந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும். ரிஷிதா ஸ்லிம் அண்ட் கேர் கீழ்க்கண்ட பல்வேறு சிறப்பான சிகிச்சை முறைகளை அளித்து வருகிறது.

தொப்பை குறைத்தல், தொடை மற்றும் கைகள் பருமன் குறைத்தல், குறிப்பிட்ட உடல் பகுதியில் எடை குறைப்பு, ஃபேஸ் லிஃப்டிங் மற்றும் கண்களின் கீழுள்ள கருவளையங்களை நீக்குதல், மண் சிகிச்சை, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு, டேப்பிங், டோனிங் போன்ற நவீன சிகிச்சை முறைகள், தன்னம்பிக்கை பெறவும் பாஸிட்டிவ் எண்ணங்கள் உருவாகவும் கவுன்சலிங், மூச்சுப் பயிற்சிகள், ஸ்ட்ரெஸ் குறைய தியானம், சிகிச்சைக்குப் பிறகு எடை கூடாமல் இருக்க அறிவுரைகள், கை தேர்ந்த மருத்துவர்களின் நேரடி கவனிப்பு.

திராட்சைப் பழத்தின் மருத்துவ குணம்

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.


திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும் . திராட்சை பல நிறங்களில் கிடைக்கிறது. இது வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு என பல நிறத்தில் இருக்கும்.சில வகைகளில் விதைகள் இருக்காது.

அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

நாற்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்த் தொல்லை வராது

தலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்

பிரிட்டன் நாட்டில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் அருமருந்தான தேன் பல வழிகளில்
மனிதனுக்கு பயன்படுவதை அவர்கள் கண்டறிந்தனர்.


தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற உபாதையிலிருந்து விடுதலையளிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது.

இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது.

அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம். மேலும் பிரட் உடன் தேனை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம். அது ஆல்கஹாலின் உப பொருளின் பாதிப்பையும் வெகுவாக குறைக்கிறது.

மேலும் ஜான் கூறும்போது, ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தல் நன்மை பயக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகிறார்.

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா



ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு
காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர்.


விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம்.

அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு.

அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:

உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.




* உடற்பயிற்சி செய்யுங்கள்:



எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:

ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்

தூங்கினாலே போதும்


sleep2 
சிலர் படுத்த உடனே சட்டென தூங்கி விடுவார்கள். சிலருக்கு தூக்கம் என்பது காவேரி ஆறு போல, எப்படிக் கூப்பிட்டாலும் வந்து சேராது.
இப்படி தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களை பல்வேறு நோய்கள் வந்து வாட்டி வதைக்கும் என அதிர்ச்சியூட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுவும் சின்ன சின்ன நோய்கள் அல்ல ! பார்கின்ஸன், அல்சீமர் என மருத்துவம் திகிலுடன் அணுகும் பெரிய பெரிய நோய்கள்.
இரவில் அமைதியான தூக்கம் இல்லாமல் படுக்கையை உதைப்பது, அழுவது, இடிப்பது, உடலை முறுக்கிப் பிடிப்பது என பல்வேறு வெளிப்பாடுகளால் இந்த சரியான தூக்கமின்மை அறியப்படுகிறது.
இத்தகைய நிலையில் இருப்பவர்கள் போகப் போக நரம்பு வலுவிழக்கும் பல்வேறு நோய்களுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அதுவே அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோகமாய் மாறி விடுகிறது.
அதுவும் ஐந்து வருடங்கள் இத்தகைய சிக்கல் இருந்தால் நோய் பாதிக்கப்படும் அபாயம் 18 விழுக்காடு எனவும், அதுவே பன்னிரண்டு ஆண்டுகள் எனில் 52 விழுக்காடு எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 93 பேரை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு தான் இந்த முடிவைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்ட் போஸ்ட்மா இதைக் குறித்து விளக்குகையில், தூக்கம் மனிதனுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல் எனவும், இயல்பான நிம்மதியான தூக்கம் இல்லாதவர்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மாபெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் கூறுகிறார்.
நிம்மதியாய் தூங்கினாலே போதும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதே ஒரு ஆனந்தமான தூக்கத்துக்கான அழைப்பிதழ் தானே !

ஆண்களை அச்சுறுத்தும் ஆராய்ச்சி !


( பெண் குறிப்பு :  பசங்களா நீங்க சாக்லேட் சாப்பிட்டு குண்டாயிடாதீங்க )
அதிக எடையுடன் இருப்பது பல்வேறு சிக்கல்களைத் தரும் என்பது பல ஆராய்ச்சிகளின் மூலமாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது இன்னொன்று. அதிக எடையுள்ள ஆண்களின் விந்தணு பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே அது.
அதிக எடையுள்ள பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் என்று மருத்துவர்கள் முன்னமே தெரிவித்திருந்தனர். இப்போது ஆண்கள் அதிக எடையுடனும், கொழுப்புச் சத்துடனும் இருப்பது அவர்களுடைய உயிரணுக்களைப் பாதிக்கும் எனும் ஆராய்ச்சியும் வெளியிடப்பட்டுள்ளது.
உடலின் உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடை இல்லாமல் இருப்பது இதயம் தொடர்பான நோய்கள், உயர் குருதி அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு உட்பட பல்வேறு சிக்கல்களைத் தருகிறது. இப்போது விந்தணுக்களும் இதனால் பாதிக்கப்படுகிறது எனும் ஆய்வு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இன்னும் அழுத்தமாய் சொல்கிறது.
எத்தனை அவசர வாழ்க்கையெனினும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.

குண்டாக இருபவர்களே, இது உங்களுக்கே

 namitha1
வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.
உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.
இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.
அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது ?
அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.
சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.
(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்
வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.
தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.

ஆண்களே உஷார் !

T
இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.
இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.
தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் காலார நடந்து வருவது தான் !
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.
இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.
அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.
புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை செழிக்கும்

ஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது.
பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி வரும் வாய்ப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது என்கிறது உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.
உடனடி காபி பவுடர் வாங்கி காப்பி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி ! இந்தப் பொருட்களிலெல்லாம் இருக்கக் கூடிய ஒரு அமிலமே இந்தச் சிக்கலுக்கான காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகின்றனராம்.
இந்த ஆராய்ச்சியை நடத்தில மருத்துவர் கண்டர் குஹேல், மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை என தெரிவிக்கிறார்.
மது ஆண்மையை அதிகரிக்கிறது என்னும் மூட நம்பிக்கைக்கும், குழந்தையின்மைக்குக் காரணம் பெண்கள் மட்டுமே எனும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

இது ஆண்களுக்கான சமாச்சாரம் !

tomato.jpg
தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.
லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.
நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.
அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போங்க

கற்பூரவள்ளி

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.

கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

சளித் தொல்லை நீங்க

மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

புகை பிடிப்பவரா ....?

புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது.

இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

காசநோய்

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்) வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்ட விடாது.

சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.

வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.

நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்.

சித்த மருத்துவ குறிப்புகள்

1. மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.
4. இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது: தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7. உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

10. உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

19. வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

20. மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

22. நீரழிவு நோய் குணமாக: மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

25. நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய: வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

31. மலச்சிக்கல் தீர: பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

34. கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35. இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

37. சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38. தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39. இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

40. கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41. தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42. குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

43. கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44. இரத்தம் சுத்தமாக: தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

45. முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

46. செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47. கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48. தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக: ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

50. சதை போடுவது குறைக்க: வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51. தூக்கம் வர: வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற: உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி: கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54. வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

55. பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57. மந்தம் அஜீரணம் குணமாக: கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

58. சிறு நீர் எரிச்சல் குணமாக: அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59. வாய் நாற்றம் போக: நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க: கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

61. தோல் வளம் பெற: ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

62. வரட்டு இருமல் தனிய: எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

63. கருப்பை கோளாறு நீங்க: அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

சைவ சமையல்

வாங்க சட்னி வைக்கக் கத்துக்கலாம்




தோசை வார்க்கிறது எப்படின்னு சொன்னியே தொட்டுக்கச் சட்னி எப்படி வைக்கிறதுன்னு சொன்னியாடான்னு நம்ம சாப்பாட்டுல மயங்கின ரசிகர் பட்டாளம் மின்னஞ்சல், அலைபேசி அழைப்புகள்ல திட்டுனதுனால இப்போ சட்னி வைக்கிறது எப்படின்னு பார்க்கலாம். :)


தேவையானவை :

தேங்காய் - அரை மூடி
பொரிகடலை - 25 கிராம்
பச்சை மிளகாய் - 3/4
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

1. தேங்காயை பத்தை பத்தையாக வெட்டி மிளகாய், பொரிகடலையுடன் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

2. பின்னர் வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்

3. தாளித்ததை தேங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

4. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

5. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் சுவையான சட்னி தயார்.




தோசை வார்ப்பது எப்படி ?


அடடா நம்ம வலைப்பக்கம் வந்தே பல மாதங்கள் ஆகிப் போச்சே?? சரி கவலைப்படாமல் இன்னிக்கு தோசை வார்ப்பது எப்படின்னு பார்க்கலாம்.

1. முதல்ல நம்ம பதிவே பேச்சலர்களுக்கானது தான் எனவே தோசைமாவெல்லாம் நீங்களே ஆட்டுக்கல்லிலோ, கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளுமாறு சொல்லமாட்டேன் :). ஒழுங்கா போய் கடையிலே 10 ரூபாய்க்கு மாவு வாங்கிக்கோங்க.

2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. ஒரு பெரிய வெங்காயத்தை நடுவாக்கில் இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது எதுக்குன்னு கேட்கிறீங்களா? அவசரப்படாதீங்க.

4. தோசைக்கல் சூடானவுடன் அரைஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தால் தோசைக்கல் முழுவதும் பரவுமாறு தடவுங்கள். இப்போ புரிஞ்சதா வெங்காயம் எதுக்குன்னு?

5. குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லின் நடுவில் மாவை ஊற்றி மெதுவாக கரண்டியின் அடிப்பாகத்தால் மாவால் வட்டம் போடவும்.

6. பின்னர் தோசையின் மேலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன் தீயைக் குறைத்து தோசைக்கரண்டியால் திருப்பிப் போடவும். பின்னர் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் ஐயோ!!! ச்சே!! ஆஹா ... அமுதம். :)

தோசையின் மேல் வெங்காயம், இட்லிப்பொடி இப்படி என்னவேணாலும் தூவி வெங்காயதோசை, பொடிதோசை என சாப்பிட்டு ஜமாய்ங்க ..



வெண்டைக்காய் பொரியல்

நண்பர்களே! இன்னிக்கு நாம செய்யப் போறது வெண்டைக்காய் பொரியல்.



உயிரோட இருக்கும் போது





கொலை பண்ணினதுக்கப்புறம்



தேவையானவை :
வெண்டைக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1 / சிறியது 5,6
சிவப்பு மிளகாய் வத்தல் - 6,7
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. வெண்டைக்காயை சிறியதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலையை முதலில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

3. பின் வெட்டிய வெண்டைக்காய், வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

4. பத்து நிமிடங்கள் நன்கு வதங்கியதும் அதில் உப்பையும் சேர்த்துக் கிளறவும்.

அவ்வளவுதான் சுடச்சுட வெண்டைக்காய் பொரியல் தயார்.

முன்யோசனைக் குறிப்புகள் :
1. வெண்டைக்காயை ஒரு மணி நேரம் முன்பே வெட்டி வெயில் சிறிது நேரம் வைத்து எடுத்த பின் வதக்கினால் பிசுபிசுவென்று ஒட்டாமல் வரும்.

2. காய் நறுக்கும் போது இரண்டு, மூன்று வெண்டைக்காய்களாக சேர்த்து வெட்டினால் நேரம் மிச்சமாகும்.

3. சமைப்பதற்கு முன் வெண்டைக்காய் நிறைய இருக்கும். ஆனால் வதக்கியபின் கொஞ்சமாக சுருங்கிவிடும். எனவே காய் வாங்கும் போதே இதை மனசில் வைத்துக் கொண்டு தேவையெனில் கொஞ்சம் சேர்த்தே வாங்கவும்.



கத்தரிக்காய் புளிக்குழம்பு


நண்பர்களே ! இன்னிக்கு எப்படி சுவையான புளிக் குழம்பு வைக்கிறதுன்னு பார்க்கலாம்.

தேவையானவை :
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 3 நடுத்தர அளவு
வெங்காயம் - பெரியது 1 / சின்னது 10
குழம்பு மசாலா - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3/4
கத்தரிக்காய் - 2/3
தேங்காய் - 3 பத்தை
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்

2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்

3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும். புளிச்சக்கையை கீழே போட்டுடணும் பாஸு. குழம்பிலே போட்டுடாதீங்க ;)

7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.

8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் புளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு :
இதே போல கத்தரிக்காய்க்குப் பதில் வெண்டைக்காயையும் சேர்த்துப் புளிக்குழம்பு வைக்கலாம்.

குழம்பு மசாலாவுக்கு கடையில் கிடைக்கும் சக்தி அல்லது ஆச்சி குழம்பு மசாலா பயன்படுத்தலாம். வேலை எளிது.

படம் கிடைக்கலை. அதான் பச்சைக் கத்தரிக்காய் படம் போட்டிருக்கேன்


உப்புமா கிண்டுவது எப்படி?


நான் பதிவுல உப்புமா கிண்டுறது எப்படின்னு சொல்லலை. அதுக்க்கெல்லாம் கில்லாடிகள் நிறைய பேர் இருக்காங்க. இது வேற. சாப்பிட உப்புமா கிண்டுறது எப்படின்னு தான் சொல்லப் போறேன்

தேவையானவை :
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் - 1ல் பாதி
மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.

5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.

குறிப்பு : ரவையை தண்ணீருடன் சேர்க்கும் போது காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி தண்ணியைக் குடிக்கும். பயந்துறாதீங்க. ஒன்னும் ஆகாது. தீயைக் குறைத்து வைத்துவிட்டுக் கிண்டுங்கள். அய்யோ பாவம்னு கூடக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அப்புறம்  கெட்டி ஆகிரும். அனுபவம் உள்ளவன் சொல்றேன். கேட்டுக்கங்க.



எதற்கு இந்த வலைத்தளம்?


ஏற்கனவே ஏகப்பட்ட சமையல் வலைத்தளங்கள் இருக்கும்போது எதற்கு இந்த வீண்வேலை?
பேச்சிலர் சமையல் ஒன்னும் சுலபம் இல்லைங்க. காலையில் ஏழுமணிக்கு எழுந்திருச்சி அலுவலகம் 9 மணிக்கு போறதுக்குள்ள பல் விளக்கி, குளிச்சி அதுக்கப்புறம் சமையல் பண்ணி சாப்பிட்டு அலுவலகத்துக்கும் எடுத்துட்டுப் போறப்போ எப்படியெல்லாம் சுலபமாகவும், அதே சமயம் சுவையாகவும் சில எளிமையான, எப்பவும் கேள்விப்படுற உணவு வகைகளை செய்து சாப்பிட இந்தத் தளம் உதவும். இப்படியெல்லாம் சொல்லவும் ஆசைதான். முக்கியமாக பதிவெழுத எதுவும் சிக்காத போது சமையல் சாம்பார்னு ஒப்பேத்தவும் ஒரு வழி. ;). நமக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்குவோம்கிற எண்ணம் தான் காரணம்.

என்னவெல்லாம் எழுதப்போறீங்க?
சுடுதண்ணி வைக்கிறதில இருந்து சுண்டக்கஞ்சி காய்ச்சுறது வர சொல்லுவோம். எல்லோரும் சாப்பிடுற ஆனா சமைக்கத் தெரியாத சாம்பார்,ரசம்,கூட்டு,பொரியல் வைக்கிறது எப்படின்னு சொல்றதுதான் இந்த தளம்.

உண்மையிலேயே உபயோகமா இருக்குமா?
ஏன் இருக்காது? உங்க நண்பர்களுக்கு சமைச்சு போட்டு அவர்களை ஆம்புலன்சில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போற கடமை இருக்கே அநத பாக்கியம் உங்களுக்குக் கிடைக்க வேணாமா? நம்மளால நாலு டாக்டர் நல்லா இருந்தா என்ன சமையல பண்ணினாலும் தப்பில்லை.



சாம்பார் வைப்பது எப்படி?


முதலில் தமிழர்களின் தேசிய குழம்பான சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாம்.

முதலிலேயே சொல்லிடறேன் இது பேச்சிலர் சமையல் தளம். அது இது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். சமாளிச்சிக்கோங்க. :)

தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு)
தக்காளி - 3
வெங்காயம் - 2 பெரியது அல்லது 8 சிறியது
புளி - எலுமிச்சம்பழம் அளவு
சக்தி மசாலா சாம்பார் பொடி - 4 ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :
1. முதலில் பருப்பைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும். குக்கர் என்றால் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் அடிக்கும் வரை அடுப்பில் வேகவைக்கவும். பாத்திரம் என்றால் கையில் எடுத்துப் பார்த்து பருப்பு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும். கை சுட்டுக்கும் எனவே சுட்ட கையை நல்ல குளிர்ந்த நீரில் கழுவவும்.

2. பருப்பு வேகும் நேரத்தில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

3. பின்னர் வாணலியை(வானொலி அல்ல) அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு மீண்டும் வதக்கவும்.

4. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சக்தி சாம்பார் பொடியைப் போட்டு மறுபடியும் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

5. இப்போது அடுப்பில் தீயைக் குறைத்து வைத்துவிட்டு வேகவைத்த பருப்பையும், புளிக்கரைசலையும் வாணலியில் ஊற்றவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

6. பின்னர் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அவ்வளவுதான் கும்முன்னு சாம்பார் தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எதற்கு வேண்டுமானாலும் ஊற்றிச் சாப்பிடுங்க.

குறிப்பு : சாம்பாரில் மேலும் முருங்கைக்காய், காரட் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் துண்டுகளாக நறுக்கி பருப்புடன் சேர்த்து அவித்துக் கொள்ளவும். கத்தரிக்காய் சேர்க்க விரும்பினால் துண்டுகளாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

தீபாவளி லேகியம்

தீபாவளியன்று ஏகப்பட்ட பட்சனங்களை செய்து, வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்த பின்னர் பட்டாசையம் கொளுத்தி கொண்டாடியாயிற்று. அடுத்து முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. அதுதான் தீபாவளி லேகியம்.

சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்.

தீபாவளி லேகியம் என்றதும் பயந்து போய் விட வேண்டாம். சாதாரண இஞ்சி கஷாயம்தான் இது.

தீபாவளி லேகியம் தயாரிக்க தேவையான பொருட்கள்..

இளம் இஞ்சி - ஒரு பெரிய துண்டு.
மல்லி விதைகள் - 1 கப்.
ஜீரகம் - அரை கப்.
நெய் - 3 தேக்கரண்டி
வெல்லம் - 1 கப்.

செய்முறை:

கொத்தமல்லி விதைகளையும், ஜீராவையும், அரை குவளை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில், இந்த பேஸ்ட்டை கலந்து நன்கு நைசாக வருமாறு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு மெதுவாக நெய்யை கலந்து அப்படியே கலக்கி வரவும். இந்தக் கலவையில் உள்ள நீர் அனைத்தும் ஆவியாகி, அப்படியே இறுக்கமான பேஸ்ட் ஆக மாறி விடும். இதுதான் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து.

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு முடித்ததும் இந்த தீபாவளி மருந்தை உட்கொண்டால் வயிறு கெடாது, ஜீரணப் பிரச்சினை வராது.

தித்திப்பான தீபாவளிக்கு இந்த கஷாயம் அவசியம் தேவை. மறந்துடாம தயாரிச்சுடுங்க.

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

தேங்காய்: 1 மூடி

பச்சை மிளகாய்: 4

புளி: சுண்டைக்காய் அளவு

வெங்காயம்: 1

உடைத்த கடலை: சிறிதளவு

கடுகு: கால் தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், புளி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், உடைத்த கடலையைப் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கடுகைத் தாளித்து அதில் கொட்டிவிடவும். இப்போது இட்லிக்கு தொட்டுச் சாப்பிட தேங்காய் சட்னி ரெடி.

தேங்காய் சாதம்


தேவையான பொருட்கள்:

1 கிலோ பச்சரிசி, ஒரு தேங்காய், ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிய துண்டு பெருங்காயம், 2 தேக்கரண்டி உளுந்து, 100 கிராம் முந்திரிப்பருப்ப, 8 காய்ந்த மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, 100 மி.லி. நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை.

செய்முறை:

 பொல பொலவென்று சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு, அதில் துறுவிய தேங்காயைப் போட்டு பொன் நிறத்திற்கு வறுத்துக் கொள்ளவேண்டும். பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அதை காய விடவேண்டும். பின்பு கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் அதில் மிளகு மற்றும் உளுந்து பருப்பை போடவும். பருப்பு சிவந்த நிறத்திற்கு வந்ததும் அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரியும் தருணத்தில் இறக்கவும். ஆஆ வாணலியில் இருப்பதை ஆற வைத்த சாதத்தின் மேல் கொட்ட வேண்டும். தேங்காய், பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது தேங்காய் சாதம் சாப்பாட்டு மேஜைக்கு போக ரெடி.

வெஜிடபிள் பிரியாணி


தேவையான பொருட்கள்:
1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

 அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பெங்காலி தம் ஆலு

தேவையான பொருட்கள்:
உருளைகிழங்கு - 1 கிலோ.
 மஞ்சள் பொடி 1- ஸ்பூன்.
எண்ணெய் - 1 குவளை.
பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு , கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவையான அளவு.
மிளகு - 1 ஸ்பூன்.
தனியா - 1 ஸ்பூன்.
இஞ்சி - 1 ஸ்பூன்.
பூண்டு - 1 ஸ்பூன்.
மிளகாய் - 4

செய்முறை

உருளைக்கிழங்கைத் தவிர மற்ற அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

உருளைகிழங்கை உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் தோலுரித்து குச்சியால் லேசாக துளை ஓட்டை போட வேண்டும்.

ஒரு தட்டில் இதை கொட்டி சிறிது மஞ்சள் போட்டு, சிறிது மிளகாய்ப் பொடி தூவி, தனியா, கிராம்பு, மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதன் மீது கொட்டி பரப்ப வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உருளைகிழங்கு போடவேண்டும்.

கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்ததும், ஏலக்காய் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் பெங்காலி தமி ஆலு தயார்.

இதை சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடனும் பரிமாறலாம்.

சொஜ்ஜி அப்பம்

தேவையான பொருட்கள்:

தேங்காய் விழுது (அரைத்தது) - 2 டம்பளர்கள்.

சர்க்கரை பாகு - ஒன்னேகால் டம்பளர்.

மைதா மாவு - 4 டம்பளர்கள்.

செய்முறை:

சர்க்கரைப் பாகில் தேங்காய் விழுதை சேர்க்கவும். அதை கெட்டியாக கிளறவும். சூடு ஆறிய பின்னர் உருண்டைகளாக செய்து, பூரி போல் இட்ட மைதாவிற்குள் பூரணமாக வைத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

அட்டகாசமான சொஜ்ஜி அப்பம் ரெடி!

ருச் பஞ்சமி மசாலா


தேவையான பொருட்கள்:
வெண்டைகாய் கால் கிலோ.
பூசணைகாய் கால் கிலோ.
சுரைக்காய் கால் கிலோ.
புடலங்காய் கால் கி.
வெள்ளரிக்காய் கால் கிலோ
பாலக்கீரை சிறிதளவு
பச்சை மிளகாய் 5
வெங்காயம் 2
தேங்காய் சிறிதளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு சிறிதளவு

செய்முறை:

முதலில் காய்களை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து உப்பு போடவும்.

சிறிது கொதித்த பின் நறுக்கிய காய்கறிகளை அதில் சேர்க்கவும். வெங்காயம், கொத்தமல்லியுடன் கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஆறிய பின் பரிமாறவும். இது சத்தான வைட்டமின் உணவாகும்.

வாழைப்பூ கிரேவி


தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் -5
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 5
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:

முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும்.பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதில், சிறிது கரம் மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

பிறகு, வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் சேர்க்கவும். இதன் மீது கொத்தமல்லியை நறுக்கி தூவி விடவேண்டும்.

காய்கறி உப்புமா

தேவையான பொருட்கள்:

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 2
கேரட் நறுக்கியது 1 கப்
தக்காளி 2
பச்சை மிளகாய் 5
பீன்ஸ் நறுக்கியது 1 கப்
பச்சை பட்டாணி அரை கப்
முந்திரி பருப்பு
எலுமிச்சை சாறு சிறிதளவு
லவங்கம், பட்டை, மஞ்சள் தூள்
கொத்துமல்லி, கறிவேப்பிலை
டால்டா அல்லது வெண்ணெய்

செய்முறை:

முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும்.

இதனுடன் அவித்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பின்னர் தக்காளி, லவங்கம், கரம் மசாலா, பட்டையை சேர்க்கவும். 2 நிமிடம் வேக விடவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து இதில் ஊற்றி உப்பு போடவும்.

பின்னர் ரவையை சிறிது சிறிதாக கொட்டி நன்றாக கலக்கவும். நன்றாக திரண்டு கெட்டியாக வந்தவுடன் மீதமிருக்கும் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு கலந்து ஆறவிடவும்.

மாம்பழம் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையான வெஜிடபிள் உப்புமா ரெடி.

மாங்காய் புளியோதரை

தேவையான பொருட்கள்:
அரிசி 2 கப்
மாங்காய் 2
அவல் 1 கப்
வெங்காயம் 2
மிளகாய் 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி
இஞ்சி சிறிதளவு
மஞ்சள் பொடி
கரம் மசாலா
எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் அரிசியை வேகவைத்து எடுத்து கொள்ளவும். மாங்காய் தோலை சீவி விட்டு, நன்றாக துருவி வைத்துகொள்ளவேண்டும். இஞ்சியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை வதக்கவும். இத்துடன் அவலை கொட்டி நன்றாக கிளறவும்.

இந்த கலவையுடன் மாங்காய் துருவலை கொட்டி கலக்கவும். தேவையான அளவு உப்பு போடவும். இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும். பிறகு சாதத்தை இத்துடன் கலந்து, எலுமிச்சை சாறு விடவும்.

சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

காளான் மசாலா

தேவையான பொருட்கள்:
காளான் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
வெங்காயம் - 2
மிளகாய் - 5
மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு.

செய்முறை

முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக கலக்க வேண்டும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.

பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மிக்ஸட் வெஜிட்டபிள் தால்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 கப்.
பச்சை பட்டாணி - 1 கப்.
காலி ப்ளவர் - 1.
கேரட் - 2.
சிகப்பு முள்ளங்கி - 1.
பூசணி - 1 கீற்று.
சுரைக்காய் - 1 கீற்று.
வெள்ளரிக்காய் - 2.
பச்சை மிளகாய் - 4.
இஞ்சி - சிறிது.
கொத்தமல்லி - சிறிது.
பெருங்கயத்தூள் - சிறிது.
சீரகம் - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - சிறிது.
எலுமிச்சை சாறு - சிறிது.

செய்முறை:

முதலில் எல்லா காய்களையும் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, இஞ்சி ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் பாசிப் பருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பின்னர் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் போடவும், பிறகு மிளகாய், அரைத்த இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து நறுக்கிய காய்கறி மற்றும் பாசிப் பருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அப்படியே விட்டு விடாமல், மெதுவாக கிளறி விட்டு வரவும். இல்லாவிட்டால் அடி பிடித்துக் கொள்ளும்.

கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு விட்டு கொத்தமல்லியை போட்டு மூடி வைக்கவும்.

ஆறிய பின்னர் எடுத்து பரிமாறினால் சுவையான மிக்ஸ்டு வெஜிடபிள் தால் ரெடி.